சட்டத்தை மீறியுள்ள கோத்தபாய ராஜபக்ச..!!
இலங்கை இராணுவ அதிகாரிகளின் படங்களை தமது அறிக்கைகளில் பிரசுரிப்பதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச சட்டத்தை மீறியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. சிஎம்இவி என்ற தேர்தல்கள் கண்காணிப்பு மையம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஒழுங்குகளை மதித்து நடப்பதாக உறுதியளித்துள்ளனர். இருப்பினும் பத்திரிகை விளம்பரங்களில் அவர்கள் இந்த ஒழுங்குகளை மீறி வருகின்றனர். முப்படைகளின் தளபதிகளை தாங்கிய கோத்தபாய ராஜபக்சவின் விளம்பரங்கள் மூன்று பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளனர்.
உதாரணமாக 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி தற்போதைய இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அன்று விடுத்த அறிக்கை ஒன்று இந்த விளம்பரங்களில் வெளியிடப்பட்டுள்ளது. என்பதையும் சிஎம்இவி தெரிவித்துள்ளார்.