புதுவருடத்தில் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
இலங்கையின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், புதிய அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வரி விலக்கு இன்று (01) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டார்.
அதன்படி, பெறுமதி சேர் வரி மற்றும் உற்பத்திகளுடன் தொடர்புடைய வரிகள் எனப் பல்வேறு வரிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.