இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா!
இலங்கையில் புதிதாக 4 பேருக்கு கொடிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1089 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரைக்கும் 660 பேர் குணமடைந்துள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.