“இனி எங்கள் தொல்லை உங்களுக்கு இல்லை” அழுகிய நிலையில் மீட்கப் பட்ட இளைஞன் மற்றும் யுவதியின் சடலம்..! கதறும் பெற்றோர்..!!
பெங்களூரில் காதல் ஜோடியின் சடலங்கள் சிதைந்த நிலையில் இருந்து பொலீஸார் மீட்டுள்ளனர். கேரளா திருச்சூரை சேர்ந்த அபிஜித் கல்லூரியில் தன்னுடன் படித்த மஹாலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் வீட்டில் எதிர்ப்பு எழுந்தது.
இருப்பினும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் வீட்டில் பேசியுள்ளனர். ஆனால் ஏற்றுக் கொள்ளும் நிலையில் வீட்டில் உள்ளவர்கள் இல்லை என்பதை அறிந்துகொண்ட ஜோடி வீட்டை விட்டு திடீரென வெளியேறி உள்ளனர். இருப்பினும் மஹாலட்சுமியின் மாமா அதிக தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 23ம் திகதி தனது மாமாவிற்கு கால் செய்த மஹாலட்சுமி இனி என் தொல்லை இல்லை. மகிழ்ச்சியாக இருங்கள் என கூறிவிட்டு போன் கட் செய்து ஓப் செய்துள்ளார். பயந்த பெற்றோர் இவர்களை காணவில்லை என பொலீஸில் புகார் கொடுத்ததை தொடர்ந்து பொலீஸார் தேடியதில் இவர்களின் சடலங்களை மீட்டுள்ளனர்.
பெங்களூரில் கிராமத்தில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப் பட்ட இருவரின் சடலமும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. சடலத்தை மீட்ட பொலீஸார் விசாரணை மேட்கொண்டு வருகின்றனர்..!