கொரோனா வைரஸ் எப்போதும் முடிவுக்கு வரும் என கூறிய சிறுவன் தொடர்பில் வெளிவந்த உண்மை தகவல்… ! யார் இந்த சிறுவன் ? இதோ உங்களுக்காக…!!
கடந்த நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப் படும் ஜோதிட சிறுவன் யார்? அவன் சொல்வதில் உண்மை இருக்கிறதா என பலரும் குழம்பிப் போய் இருந்தனர். காரணம் அண்மையில் அபிக்யா ஆனந்த் என்ற சிறுவன் ஒருவன் கொரொனா வைரஸ் மே மாதம் 29ம் திகதிக்கு முன் முடிந்துவிடும் என கூறி இருந்தான்.
எப்படி ஒரு சிறுவனால் இது முடியும் என பலர் கேட்ட போது கொரோனா பற்றி கடந்த வருடமே அபிக்யா சொன்ன விடயங்களை மக்களுக்கு காட்டி இருந்தான். 2020ம் ஆண்டு முற்பகுதில் அழிவு ஏற்படும் என்றும் இதனால் அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் பாதிக்கப் படும் என்றும் குறிப்பிட்டு இருந்தான்.
இது தான் தற்போது நடக்கிறது என சிறுவன் கூறி இருந்ததை தொடர்ந்து சிறுவன் பற்றி தேடிய போது கர்நாடகவை சேர்ந்த அபிக்யா, ஆனந்த் சுப்ரமணியன், அனு தம்பதிகளின் மூத்த மகன். சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட அபிக்யா ஆன்மீக விடயங்களை படிக்க ஆரம்பித்தார்.
ராசி பலன், ஜோதிடம் என சிறு வயதில் ஆய்வில் இறங்கியதுடன் அது பற்றி ஆதாரத்துடன் மக்களிடம் எடுத்துச் செல்ல ஆரம்வித்தான். இந்து சமயத்தின் வேதங்கள் அனைத்தையும் சிறு வயதில் படித்து முடித்த அபிக்யா பகவத் கீதா, ஸ்லோகாபிரவீனா, ஸ்பந்தன்ஸ்ரீ, என முறையே 2015,2016ம் ஆண்டுகளில் பெற்றார்.
இதன் பின் ஜாதக கணிப்பு, கிரகப் பெயர்ச்சி என ஆராய்வதோடு மக்களுக்கு ஆதார பூர்வமாகவும் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா பற்றிய இவரது கணிப்பு சரியா மே 28ம் திகதிக்கு முன்பு அனைத்தும் தீர்ந்து விடுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்….!!