யாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச்சட்டம் தொடந்து நீடிக்கும்..!!
யாழ்ப்பாணம், கொழும்பு, களுத்துறை, கம்பகா, புத்தளம், மற்றும் கண்டி ஆகிய ஆறு மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு தொடந்து நீடிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆறு மாவட்டங்களைத் தவிர 19 மாவட்டங்களில் ஊரடங்குச்சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. இவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கு மாலை 2 மணிக“கு மீளவும் அமுல்படுத்தப்படவுள்ளது. இதேநேரம் அரச மற்றும் தனியார் வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலம் நாளை ஆறாம் திகதியிலிருந்து ஏப்ரல் 10 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.