தகாத உறவால் தமிழகத்தில் நடந்த 1311 கொலைகள்..!! ஆபாச படம் தான் முக்கிய காரணம்.!
இந்தியாவில் கள்ளக் காதல் கற்பழிப்பு போன்றவற்றால் 2009ம் ஆண்டில் இருந்து நேற்று வரை 1311 பேர் மரணமடைந்துள்ளனர் என டி.ஜி.பி தனது அறிக்கையை நீதி மன்றத்தில் இன்று ஒப்படைத்துள்ளார். 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2019 ஜூன் 23ம் திகதிவரை
தகாத உறவின் காரணமாகவும் கற்பழித்தும் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை இது. குன்றத்தூர் அபிராமி சுந்தர் மீதான காதலால் தான் பெற்ற குழந்தைகளை கொடூரமாக கொலை செய்தார். அவரது பாணியில் மேட்டூரை சேர்ந்த தீபிகா தன்னுடைய குழந்தைகளையும் கொலை செய்தார்.
இப்படி பல பெண்கள் தகாத உறவு காரணமாக குழந்தைகளை கொன்று புதைக்க ஆண்களும் குழந்தைகள் பெரியவர்கள் என கற்பழித்து கொலை செய்தார்கள். கடந்த 10 வருடத்தில் மட்டும் தகாத உறவினால் 1311 பேர் கொலை செய்யப் பட்டுள்ளனர். இதனை சரியான முறையில் அறிக்கையாக தயாரித்த டி.ஜி.பி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
இது தொடர்பாக பேசிய நீதிபதிகள். தமிழ் நாட்டில் ஆபாச படங்களை பார்த்துவிட்டு அதில் நடக்கும் முறைகளால் தான் இன்று அதிக கற்பழிப்புகள் இடம் பெறுகின்றது.!இது தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
அத்துடன் மத்திய மாநில அரசுகள் இந்த விடயத்தில் அதிக கவனம் எடுத்து தண்டனைகளை கடினமாக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த குற்றங்கள் எதிர் காலத்தில் அதிகமாகிவிடும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்