தம்பி மீதான பாசத்தால் அக்கா செய்து வைத்த திருமணம்…! துடிதுடித்து இறந்த அப்பாவி கர்ப்பிணி பெண்..!
கோவில்பட்டி சத்திரப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் மனைவி சண்முகப்பிரியாவை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் காளியம்மா.இவரது தம்பி மாரியப்பன். இவர்களின் பெற்றோர் இறந்துவிட மாரியப்பனை காளியம்மா வளர்த்துள்ளார்.
கொத்தனார் வேலை செய்து வந்த மாரியப்பன் வாரத்தில் இரண்டு அல்லது ஒரு நாள் மட்டுமே வேலைக்கு செல்வது வழக்கம். எந்த கெட்ட பழக்கமும் மாரியப்பனிடம் இல்லை ஆனால் வேலைக்கு மட்டும் செல்ல மாட்டான்.
இதனால் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்திவிடுவான் என்ற நம்பிக்கையில் சண்முகபிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் அப்போது வேலைக்கு போவதை விரும்பவில்லை மாரியப்பன். கர்ப்பமாக இருந்த சண்முக பிரியா கணவரை வேலைக்கு செல்லும் படி வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ தினத்தன்று வழமைபோல் காலை தம்பிவீட்டிற்கு சென்றுள்ளார் காளியம்மா நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது மாரியப்பன் மற்றும் சண்முகப்பிரியா இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
பொலீஸாரின் உதவியுடன் வைத்திய சாலையில் சேர்த்த போது சண்முகப்பிரியா ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த மாரியப்பன் உடல் நிலை குணமாகிவரும் நிலையில் அவர்கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வேலைக்கு போக சொல்லி வற்புறுத்தி வந்ததால் கோவம் தாங்காமல் கத்தியால் குத்திவிட்டேன்.
வயிற்றில் என் குழந்தையும் கண்முன்னே என் மனைவியும் துடி துடித்து சாவதை பார்க்க முடியவில்லை அதனால் நானும் கழுத்தை அறுத்தேன் பின் எதுவும் நினைவில்லை என கூறியுள்ளார். பொலீஸார் தொடந்தும் விசாரணை செய்துவருகின்றனர்..!!