பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி..! மதுரையில் நடந்த கொடூரம்..!!
மதுரையை சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர் நாமக்கல்லில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட விடயம் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக வாந்தி மற்றும் தலை சுற்றலால் குறித்த சிறுமியால் படத்தில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறிய சிறுமியை அவதானித்த ஆசிரியர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன் போது சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ந்த நிலையில் பெற்றோருக்கும் பொலீஸாருக்கும் தகவல் கொடுக்கப் பட்டதை தொடர்ந்து பொலீஸார் சிறுமியிடம் செய்த விசாரணையில் பல திடுக்கிடும் விடயங்கள் வெளியாகி உள்ளது.. இது குறித்து வெளியான தகவல்.. இன்ஸ்ட்டாகிராம் கணக்கை ஆரம்பித்த சிறுமி தனது புகைப்படங்களை பதிவேற்றி வந்துள்ளார்.
இதனை பார்த்த அல்ஹசன் தனியார் கல்லூரி மாணவன் ஒருவர் புகைப்படங்களுக்கு பின்னூட்டம் இட்டு வந்ததுடன் பின் தனிப்பட்ட மெசேஜ் அனுப்ப ஆரம்பித்துள்ளார். மாணவன் அழகை வர்ணிக்க ஆரம்பித்ததுமே அதில் மயங்கிய சிறுமி குறித்த மாணவர் கூறிய படி ஆட ஆரம்பித்தார்.
உன் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம் என புகழ்ந்ததோடு உன் அரைகுறை ஆடை புகைப்படங்களை அனுப்பு ரசிக்க வேண்டும் என கூற சிறுமி தனது கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். அதன் பின் இருவரும் தொலைபேசியில் பேசிவந்த நிலையில் சிறுமியை சந்திக்க அழைத்துள்ளார். சிறுமியும் குறித்த இளைஞரை நம்பி சென்றுள்ளார். ஆனால் அவரோ ஹோட்டல் ரூமிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு தவறாக நடக்க முயன்ற போது சிறுமி தப்பிச் செல்ல முயன்றுள்ளார், ஆனால் சிறுனியின் அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டியதுடன் பல தடவைகள் மோசமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை கூறினால் வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியதை தொடர்ந்து சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்த நிலையில் கர்ப்பமாகி இருப்பது தெரியவந்த நிலையில் பொலீஸார் சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞனை போக்ஷோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்…!