தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சத்தால் பறிக்கப் பட்ட உயிர்..! அப்பாவி இளைஞன் துடிதுடித்து மரணம்..!
எம் மக்களுக்கு தண்ணீரின் அருமை இன்னும் தெரியவில்லை. இன்றளவும் தண்ணீரை வீனாக்கிக் கொண்டிருகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தாலும் தண்ணீர் பற்றாக்குறை தீராமல் உள்ளது. இதன் உச்சம் தான் இந்த கொலையும்.
தஞ்சை விளார் வடக்கு மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் ஆப்பரேட்டராக செயல்பட்டுவந்த ஆனந்தபாபு என்பவரை அடித்து மற்றும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. தண்ணீர் பிடிக்கும் பிரச்சனையில் ஆனந்த பாபுவுடன் குமார் என்பவர் வாய் தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.
அனைவருக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டும் என ஆனந்தபாபு கூறியும் கேட்காத குமார் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த குமாரின் மகன்களான கோகுல் நாத், கோபி நாத், ஸ்ரீ நாத் ஆகியோர் உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர்.
அத்துடன் தாங்கள் வைத்திருந்த கத்தியால் பல இடங்களில் குத்தி உள்ளனர் ஆனந்தபாபுவின் தந்தை தர்மராஜ் தடுக்க வந்தபோது அவரையும் குறித்த நபர்கள் தாக்கியுள்ளனர்.
வலியால் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆனந்தபாபுவை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்..! இது தொடர்பாக பொலீஸார் ஸ்ரீநாத்தை மட்டும் கைது செய்துள்ளனர்..!