திருமணம் நடக்கும் ..நடத்தி வைப்பேன்..உறுதியளித்த படி நடத்திய காவல்துறை கண்காணிப்பாளர் அருண். குவியும் பாராட்டுகள்..!!
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி அவர்களின் செயல் குறித்து நெல்லை மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை மாவட்ட உதவி ஆய்வாளராக இருந்த அசோகன் பணியில் இருந்த போது விபத்தொன்றில் மரணமடைந்தார்.
அசோகனின் இறுதி கிரியையில் அவரது மனைவி கதறி அழுதது பலரையும் கண்ணீர் சிந்த வைத்தது. ஜூன் 14ம் திகதி மகளின் திருமணத்தை ஆடம்பரமாக எடுக்க நினைத்தார். இப்போது என்ன செய்வேன். என் கணவரின் கனவும் மகளின் வாழ்க்கையும் கேள்விக் குறியாகிவிட்டதே என கதறி அழுதுள்ளார்.
இதனை பார்த்த நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் கவலை படாதீர்கள் அசோகன் அவர்களின் கனவும் மகள் அன்பரசியின் திருமணமும் நிச்சயம் நடக்கும் என கூறியுள்ளார். ஜூன் 14ம் திகதி ஏராளமான பரிசு பொருட்களுடன் திருமண வீட்டில் குவிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட காவல் துறையினர்
அன்பரசியின் திருமணத்தை சிறப்பாக நடத்தினார்கள். அருண் சக்தி தந்தை அசோகனின் இடத்தில் இருந்து மகளுக்கு மாங்கல்ய தானம் செய்து வைத்தார். குடுத்த வாக்கை நிறைவேற்றியது மட்டும் இன்றி தந்தையில்லா வேதனையை ஒரு பெண்ணுக்கு தெரியாமல் நடந்துகொண்ட அருண் சக்திக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அன்பரசியின் திருமண புகைப்படங்களை தமிழ் நாடு காவல்துறை உத்தியோகபூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது..! புகைபட நன்றி: தமிழ் நாடு காவல்துறை இணையத்திற்கு..!!