நேற்றிரவு கோரம்; பஸ் – லொறி மோதியதில் பற்றியது தீ! பலர் சாவு!!
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் லொறி – பஸ் நேருக்கு நேர் மோதியதில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம், குர்சகாய்கஞ்ச் பகுதியிலிருந்து நேற்று இரவு ஜெய்ப்பூர் நோக்கி, படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் கன்னாஜ் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சிலோய் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த லொறியுடன் மோதியது. இரு வாகனங்களும் வேகமாக வந்தமையால் தீ பற்றியது.
இதில், 20 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேவேளை, 21 பேர் பரை படுகாமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.