கனடாவில் வாடகை வீட்டில் பாலியல் துன்புறுத்தல் அனுபவிக்கும் பெண்கள்..! கொடுமையில் இருந்து தப்பிய பெண் கூறிய விடயங்கள்..!
அண்மைகாலமாக கனடாவில் அதிக பெண்கள் சந்திக்கும் மோசமான விடயம் பற்றி பெண்கள் அமைப்புகள் விசனம் தெரிவித்து வருகின்றது. கடந்த சில வருடங்களாக கனடாவில் வாடகைக்கு இருக்கும் பெண்கள் பாலியல் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர், உதவுவதற்கு யாரும் இன்றி வாடகை வீட்டில் வாழும் பெண்களே இது போன்ற துன்பங்களை அதிகள் அனுபவிப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
இது குறித்து Judy White என்ற இளம்பெண் குறிப்பிடுகையில் நானும் எனது காதலனும் 2013ம் ஆண்டு ஆண்டு கனடாவின் St Jon’s பகுதியில் 4 படுக்கை அறை கொண்ட வீட்டை வாடகைக்கு வாங்கினோம், சில வருடங்களில் எனது காதலர் பிரிந்து சென்று விட்டார், நான் வேறு வழி இன்றி நான் அங்கு வாழ்ந்தேன்,
ஒரு நாள் கண்ணடித்த என் வீட்டின் சொந்தகாரர் என்னோடு நீ இருந்தால் என் வீட்டிற்கு வாடகை கட்டவேண்டாம் என்றார் , கேலி பேசுகிறார் என நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன், ஆனால் இதனை தொடர்ந்து கூறியதுடன் ஒரு நாள் தவறாக நடக்க முயன்றார்.
அவரிடம் இருந்து தப்பிய நான் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன், இது போல் ஏராளமான பெண்கள் தற்போது துன்புறுத்தப் படுகின்றனர். குழந்தைகளோடு இருக்கும் பெண்களே அதிகம் பாதிக்கப் படுகின்றனர் என தெரிவித்துள்ளார்…!!