ஒரே நாளில் அதிகரித்த கொரோனா வைரஸ் மரணங்கள்…! எந்த நாட்டில் எத்தனை பேர்.!? இதோ முழு விபரம்…!!
கொரோனா வைரஸினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் அதிகரித்து ஒட்டுமொத்த உலக மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது, இது வரை இந்தியாவில் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 400 எட்டியுள்ள நிலையில் மரணங்கள் 6 கடந்துள்ளது.
இலங்கையில் இது வரை 91 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் மரணங்கள் நிகழவில்லை. இருப்பினும் மற்றைய நாடுகளில் மரணங்கள் பதிவாகி உள்ளது. இத்தாலியில் ஒரே நாளில் 800 மரணங்கள் பதிவாகி உள்ள நிலையில் அமெரிக்காவில் 119 மரணங்கள் பதிவாகி உள்ளது, ஈராக், பிரித்தானியா, மற்றும் சில நாடுகளில் 100 மேற்பட்ட மரணங்கள் பதிவாகி உள்ளது.
பிரான்ஸில் 112 பேர் உயிரிழந்துள்ள நிலையில் துருக்கியில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியாவில் இது வரை 119 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர் ஆனால் மரணங்கள் இல்லை, பஹ்ரைன் தனது முதல் கொரோனா மரணத்தை பதிவு செய்துள்ளது,
கனடாவில் மொத்தமாக உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று பகல் 12 மணிவரை உலகம் முழுவதும் மொத்தமாக 15 ஆயிரத்து 304 மரணங்கள் பதிவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது..!!