வைத்தியசாலை தரையில் வரிசையாக கிடக்கும் கொரோனா நோயாளிகள்..! வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சியில் மக்கள்..! வீடியோ இணைப்பு..!!
கொரோனாவின் கோர தாண்டவத்திற்கு சுமார் 192 நாடுகளை சேர்ந்த 13800 பேர் மரணமடைந்துள்ளனர். அத்துடன் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா தற்போது சீனா தவிர்த்து அனைத்து நாடுகளையும் பலி எடுத்து வருகிறது.
இதில் அதிகமானோர் பலியான நாடாக இத்தாலி பதிவாகி உள்ளது. இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதிகமானோர் பாதிக்கப் பட்டு அதிக உயிர் இழப்புகள் நிகழ்ந்த நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாகும். இங்கு இதுவரை சுமார் 28768 பேர் பாதிக்கப் பட்ட நிலையில் 1772 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிக வைத்தியசாலைகள் இல்லாத ஸ்பெயின் நாட்டில் இருந்த அத்தனை வைத்தியசாலையிலும் படுக்கைகள் நிறைந்து கொரோனா நோயாளிகள் இருக்கும் நிலையில் புதிதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுவோருக்கு படுக்கை வசதிகள் இல்லை, இதனால் அனைவரும் தரையில் படுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வீடியோ வைரலாகி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மக்களே நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டாலும் எமக்கும் இந்த நிலை ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்…!!
A tragic scene in #Spain: Spanish hospitals are all out of beds and have resorted to treating patients on the floor. If world leaders do not react quickly to get ahead of the #Coronavirus, their countries could soon endure the same fate. #CoronavirusEspañapic.twitter.com/s5TChJ6yY5
— Prof. Steve Hanke (@steve_hanke) March 22, 2020