வேலை தேடி சென்று பாலியல் கும்பலிடம் சிக்கிக் கொண்ட யுவதி.! காப்பாற்றி அண்ணனிடம் ஒப்படைத்த கஷ்டமர்.! இந்தியாவில் நடந்த சினிமாவை மிஞ்சிய செயல்..!!
வேலை கிடைக்குமென நம்பிச் சென்று பாலியல் கும்பலிடம் மாட்டிக் கொண்ட 27 வயது இளம் பெண்ணை அங்கு கஸ்டமராக சென்ற நபர் ஒருவர் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் டெல்லியில் இடம் பெற்றுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த 27 வயது சுவாதி (பெயர் மாற்றம்) என்ற பெண் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்துவந்துள்ளார்.
!Advert!
அங்கு அவரது திறமைக்கான சம்பளம் கிடைக்கவில்லை அத்துடன் அவரது குடும்ப நிலைக்கு வேறு வேலை தேவையாக இருந்துள்ளது. இதனால் வேறு வேலை தேடியுள்ளார். அதன் போது வேறு பெண் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. குறித்த பெண்யில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாகவும் தனது உறவினரின் நிறுவனம் என்பதால் எந்த பயமும் இல்லை எனவும் ஆசை காட்டியுள்ளார்.
குறித்த பெண்ணின் ஆசை வார்த்தையில் மயங்கிய யுவதி இருந்த வேலையைவிட்டுவிட்டு டெல்லிக்கு சென்றுள்ளார். ஆனால் அந்த பெண்ணோ ஆணொருவரிடம் விட்டுவிட்டு சென்றுவிட குறித்த நபர் பாலியல் கும்பலிடம் விற்றுவிட்டார். இந்த நிலையில் குறித்த பெண்ணிடம் கஸ்டமராக நபர் ஒருவர் வந்துள்ளார்.
!Advert!
அதற்கு தனது குடும்ப நிலையையும் தனது கஷ்டத்தையும் கூறி அழுதுள்ளார். தனக்கு உதவும் படி கேட்டுள்ளார். மனமிறங்கிய நபர் உதவ முன்வந்துள்ளார். தனது அண்ணாவின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி தான் இருக்கும் இடத்தை கூறும்படி குறித்த பெண் அண்ணனின் இலக்கத்தை கொடுத்துள்ளார்.
குறித்த நபரும் வெளியே வந்து பெண்ணின் அண்ணாவிற்கு அழைப்பை ஏற்படுத்தி நடந்த விடயங்களை கூறியுள்ளார். அதிரடியாய் செயற்பட்ட பெண்ணின் அண்ணா பொலீஸாருடன் குறித்த இடத்திற்கு வந்து தங்கையை மீட்டுள்ளார். ஏற்கனவே தங்கையை தேடி திரிந்தவருக்கு குறித்த நபர் செய்தது பெரிய உதவி என நெகிழ்ந்துள்ளார்..!
!Advert!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.