ஆற்றில் சடலமாக மிதந்த சிறுமி..! நினைவிழந்து விழுந்த தந்தை..! இந்தியாவில் தொடரும் கொடூரங்கள்..!!
நேற்றைய தினம் காணாமல் போன சிறுமி ஒருவர் இன்று சடலமாக மீட்கப் பட்ட சம்பவம் கேரளா கொல்லம் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் தான் யா தம்பதிகளின் மகளான தேவானந்தா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப் பட்டுள்ளார். குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் பிரதீப் குமார் நேற்றைய தினம் வேலைக்கு சென்றுள்ளார்.
அதன் பின் தான்யா துணிகளை துவைப்பதற்காக மகளை வீட்டில் விட்டுவிட்டு குடியிருப்பில் இருந்து வெளியே சென்றுள்ளார். சில மணி நேரத்தின் பின் வீடு திரும்பிய தான்யா மகள் வீட்டில் இல்லாததால் உறவினர் வீடுகளுக்கு சென்று தேடியுள்ளார்.
இதனை தொடர்ந்து குடியிருப்பு மக்களுடன் இணைந்து தேடிய போதும் தேவானந்தா கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து பிரதீப் குமார் பொலீஸில் புகார் கொடுத்ததை தொடர்ந்து இன்றைய தினம் காலை அருகில் உள்ள ஆற்றில் சடலமாக தேவானந்தா மீட்கப் பட்டுள்ளார். இதனை பார்த்த குழந்தையின் தந்தை நினைவிழந்து வீழ்ந்துள்ளார்.
இந்த நிலையில் குழந்தையின் மரணம் தொடர்பில் முதற்கட்ட விசாரணையில் உடம்பில் காயங்கள் ஏதும் இல்லை என்றும் ஆடையும் அப்படியே இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் தேவானந்தாவின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்..!!