நான் இன்னும் சில நிமிடத்தில் இறந்துவிடுவேன்..எனக்காக இதை செய்…. மரணிக்கும் நொடியில் நண்பனை நம்பிய இளைஞன்..! இது தான் உண்மையான நட்பு…!
அண்மையில் டெல்லியில் நடந்த தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி மரணமடைந்ததுடன் பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி அனாஜ் மண்டி என்ற வணிக தளம் ஒன்றில் ஏராளமான கடைகள் உள்ளது . அங்கே பேக் தைக்கும் நிறுவனம் ஒன்றும் இயங்கி வந்த நிலையில் தூர இடங்களில் இருந்து வந்து பணி புரிவோர் குறித்த ஆலையிலேயே தங்கி இருந்துள்ளனர்.
அப்படி தங்கி இருந்தவர்களில் முகமது முஷாரப் என்ற உத்திரப்பிரதேச 34 வயதான நபரும் ஒருவர். சம்பவ தினத்தன்று அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது அனாஜ் மண்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றி இருந்த அனைத்து வியாபார நிலையங்களும் தீ பற்றக் கூடியது என்பதால் அனைத்தும் தீபற்றிக் கொண்டது.
இதில் இருந்து அனைவரும் மீண்டு வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்ததற்கு காரணம் வெளியேறும் பகுதி முற்றிலும் தீயினால் சூழப்பட்டிருந்ததே. இந்த நிலையில் முஷாரப் தனது நண்பனான மோனு அகர்வாலுக்கு கால் செய்துள்ளார். அதில் மோனு நான் நான்கு பக்கமும் தீயினால் சூழப்பட்டுவிட்டேன். இனி நிச்சயம் நான் தப்பிவர முடியாது. இறந்துவிடுவேன். என் கண்முன்னே பலர் தீயில் கருகிகொண்டிருகின்றனர்.
என் குடும்பத்தினருக்கு என்னைவிட்டால் யாரும் இல்லை. தயவு செய்து அவர்களை பார்த்துக் கொள் என கூறியுள்ளார். அதன் போது மோனு இல்லை உனக்கு எதுவும் ஆகாது.. தப்பி வந்துவிடுவாய் என கூறியுள்ளார். இல்லை வெளியே தீயணைப்பு படை வீரர்கள் வந்துவிட்டனர். இருப்பினும் சில நிமிடம் தான் நான் உயிருடன் இருப்பேன் என கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.
உடனடியாக மோனு தீயணைப்பு படைக்கு கால் செய்தபோது அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விட்டதாக கூறியுள்ளனர். எப்படியாவது நண்பன் காப்பாற்றப் பட வேண்டும் என நினைத்து சம்பவ இடத்திற்கு வந்த மோனுவிற்கு தனது நண்பனின் கருகிய சடலம் மட்டுமே கிடைத்துள்ளது. தனது நண்பன் கதறி அழுதது குறித்து பேட்டியளித்துள்ள மோனு நாங்கள் சிறு வயது நண்பர்கள்.
எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வோம். அவனது அம்மாவை நான் அம்மா என்றும் என் அம்மாவை அவன் அம்மா என்றுமே அழைப்பான். மரண நொடியில் அவனுக்கு நான் நினைவில் வந்துள்ளேன். இறுதி நொடியில் என்னுடன் பேசியது என் நட்பு மீதான அவன் நம்பிக்கை. என கண் கலக்கியதுடன் நிச்சயம் அவன் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என கூறியுள்ளார். உண்மையில் நட்பு கடவுளுக்கே கிடைக்காத வரம் என்பது இதனால் தான்..!!