இவ் ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சை எழுதிய பாடசாலை மாணவன் விபத்தில் பலி..!!
இன்று அதிகாலை வவுனியாவிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றது. இவ் விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பகிரதன் என்பவரே மரணமடைந்தார் . இறந்த இம் மாணவன் தற்போது இடம்பெற்று வருகின்ற க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் மோட்டார் சைக்கிளில் சென்ற இன்னொரு இளைஞனும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து மரணமடைந்த பகிரதனின் சடலமானது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.