இலங்கை ஜனாதிபதியிடம் இன்று தேசிய ஆய்வு அறிக்கை கையளிக்கப்படவுள்ளது..!!!
இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பது தொடர்பான தேசிய ஆய்வு அறிக்கை இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. மேலும் இது கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிப்பதாக தெரிவித்தார்.
போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி விசேட செயலணி, தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு சபை மற்றும் காவற்துறை போன்றவர்கள் ஒன்றாக இணைந்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளார்கள். இதே வேளையில் 1,695 கிலோகிராம் சட்டவிரோத போதைப்பொருட்கள் பகிரங்கமாக அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் எண்ணக்கருவில் செயற்ப்படுத்தப்பட்ட தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதற்கமைய 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை பல்வேறு வகையான 24,818 கிலோ 393 கிராம் 767 மில்லிகிராம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஹெரோயின் விஷ போதைப்பொருள் செயற்பாட்டுக்கு அடிமையான ஒரு லட்சம் பேர் வரை நாட்டில் இருப்பதாகவும், மேல் மாகாணத்தில் மட்டும் 50 ஆயிரம் பேர் இருப்பதாகவும் போதைப்பொருள் புனர்வாழ்வுக்கான தேசிய அதிகார சபையின் ஆலோசகர் சமன்த கிதலவஆராச்சி தெரிவித்துள்ளார்.