பொலீஸார் தேடும் பெண் கிளிநொச்சியில் பார்த்தேன்.! புனித தெரேசா தேவாலய மதகுரு ஜேசுதாஸ் அவர்கள் தெரிவிப்பு.!
பொலீஸார் சில நாட்களுக்கு முன்பு பெண்கள் உட்பட ஆண்களின் புகைப்படங்கள் சில வெளியகியது. அதில் ஒரு பெண் அமெரிக்கா எனவும் தவறுதலாக புகைப்படம் வெளியாகி விட்டதாகவும் பொலீஸார் கூறினார்கள். மற்றைய இரண்டு பெண்களில் ஒருவரை கிளிநொச்சி புனித தெரேசா தேவாலயத்தில் கண்டதாக அதே தேவாலயத்தின் மதகுருவான யேசுதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்தப் பட்ட 21ம் திகதி காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது முழு நீள பாவாடை அணிந்த நிலையில் குறித்த பெண் தேவாலயத்தில் நின்று இருந்ததாக பங்கு தந்தை ஜேசுதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இன்று சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சர்வமத ஒன்று கூடல் ஒன்று கிளி/ கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசும் போதே மதகுரு அவர்கள் இதனை தெரிவித்தார். நள்ளிரவு ஆராதனை முடிந்து மக்கள் சென்ற பின்பும் கூட குறித்த பெண் தேவாலயத்தின் மத்தியில் நின்றார். எனக்கு துளியும் சந்தேகம் ஏற்படவில்லை.
சில தாய்மார் இப்படி பிராத்தனை செய்வது வழக்கம் அப்படி தான் இதனையும் நினைத்தேன் என கூறியுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீ தரன் எம் பி அவர்கள் கருத்து தெரிவித்த போது 99ல் கிளிநொச்சி மக்கள் தப்பியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”