முஸ்லீம்களை ஒதுக்காதீர்கள்…வணபிதா சாமுவேல் அவர்களின் வேண்டுகோள்..!
இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதலை தொடர்ந்து முஸ்லீம்கள் ஒதுக்கவும் ஒடுக்கவும் படுகின்றார்கள் தயவு செய்து இதனை செய்யாதீர்கள் என இலங்கை திருச்சபையின் யாழ்ப்பாண குருமுதல்வர் வணபிதா j.சாமுவேல் பொன்னையன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்திந்த வணபிதா சாமுவேல் அவர்கள் தாக்குதல் நடத்தியது தீவிரவாதிகள் தான்.
அவர்கள் முஸ்லீம் தான் ஆனால் முஸ்லீம்கள் அனைவரும் தீவிர வாதிகள் இல்லை. மதத்தின் பெயரை கூறி மனிதர்களை கொன்றவர்களுடன் ஒன்றும் அறியாத முஸ்லீம் மக்களையும் சேர்க்காதீர்கள். அனைத்து தரப்பினரும் முஸ்லீம் மக்களை ஒதுக்குவதால் அவர்கள் ஒடுங்கிய நிலையில் இருகின்றார்கள். சில இந்த தருணத்திற்காக தான் காத்திருந்தார்கள் அதனால் தான் இன்னும் பிரச்சனையை தூண்டி விடுகின்றார்கள்.
இந்த விடயத்தில் கிருஸ்தவ இளைஞர்களும் நடந்து கொள்ளும் முறை அத்தனை நல்லதல்ல. பாதிக்கப் பட்டது அதிகமானோர் கிருஸ்தவர்கள் தான். ஆனால் பழி தீர்ப்பதை ஜேசு விரும்புவதில்லை. அதனால் அனைத்து மதத்தினரும் முஸ்லீம்களை ஒதுக்காதீர்கள்.
அனைவரும் இணைந்து தீவிர வாதிகளை தேடுங்கள் அரசிடம் ஒப்படையுங்கள். என பேசியுள்ளார். இதை பார்த்தவர்கள் பாதிக்கப் பட்டவர்களே மன்னிக்கின்றனர். தயவு செய்து தீவிரவாதிகளை அடையாளம் காணுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்…!