வெளிநாடுகளில் இருந்து ஜெர்மனி சென்றுள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ளஆபத்து.. !
நோய் தொற்று காரணமாக ஜெர்மனியில் பணி புரியும் பலர் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் பொருளாதார ஆராய்ச்சிக்கான நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி வெளிநாடுகளில் இருந்து ஜெர்மனி நாட்டிற்கு பணிக்காக வந்தவர்களில் ஹோட்டல் ஊழியர்கள்,
கேட்டரிங் செய்பவர்கள், ஓட்டுனர்கள், வாகன நிறுவனங்களில் பணி புரிவோர், பயண முகர்வர்கள் என ஏராளமானவர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி இன்னும் சில துறைகளிலும் பணி நீக்கம் செய்யப் படும் என கூறப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இந்த முடிவினால் அதிகம் பாதிக்கப் பட போவது வெளி நாடுகளில் இருந்து ஜெர்மன் சென்று பணி புரிபவர்கள் என தெரியவந்துள்ளது.
ஜெர்மனி மட்டும் இன்றி அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, உட்பட பல நாடுகளில் பணி புரிவோர் பணி நீக்கத்தால் அவதி பட்டு வருகின்றனர்…!!