பூப்பெய்தி சில நாட்களில் மூன்று கொடூரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட 11 வயது சிறுமி மரணம்..! கோவையில் பரபரப்பு..!
பூப்பெய்தி மூன்று நாட்களில் மூன்று பேரால் பாலியல் கொடுமை செய்யப் பட்டு மரணமடைந்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது. கோவை அரச மருந்துவ மனையில் சுய நினைவு இன்றி சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமி நேற்று இரவு மரணமடைந்ததை தொடர்ந்து பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
ஜூன் 6ம் திகதி தலையில் மற்றும் உடலில் காயங்களுடன் சிறுமி ஒருவரை கோவை அரச மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்ட சிறுமி 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாக கூறப்பட்டது.
பொலீஸார் விசாரணை ஆரம்பித்த போது தங்கள் மகள் சில நாட்களுக்கு முன்பு தான் பூப்படைந்ததாக பெற்றோர் கூறி அழுததால் பொலீஸார் வழக்கு பதிவு செய்யாமல் விட்டுள்ளனர். ஆனால் காப்பாற்ற முடியாத நிலையில் சிறுமி மரணமடைந்ததை தொடர்ந்து கிராம மக்கள் பொலீஸில் புகார் அளித்துள்ளனர்.
குறித்த 11 வயது சிறுமியை மூன்று கயவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததால் தான் சிறுமி இறந்ததாக ஊர் மக்கள் செய்த புகாரின் பேரில் பீளமேடு பொலீஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.!