இந்தியா மற்றும் இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை..! ஆபத்தை தடுக்கும் படி வேண்டுகோள்..! பீதியில் மக்கள்…!!
திரும்பும் இடமெல்லாம் கொரோனா வைரஸ் தான். சுமார் 120 நாடுகளில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவில் சுமார் 59 மாகாணங்கள் கொரோனா தொற்றினால் முழுவதும் பாதிக்கப் பட்டுள்ளது. ஆனால் ஆரம்பித்து வைத்த சீனா அதில் இருந்து மீண்டு தனது அன்றாடம் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டது.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு தென்கிழக்கு நாடுகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகள் உடனடியாக கொரோன ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் இந்த நாட்டு அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் கொரோனாவால் முற்றிலும் முடங்கிவிட்ட நிலையில் இந்தியா தன் நாட்டு பிரஜைகளை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள சுகாதார அமைப்பு பரவ ஆரம்பித்தால் தடுப்பது கடினமாகும் என மேலும் தெரிவித்துள்ளது.
அதே போல் இந்திய, இலங்கை, இந்தோனேசியா, மலேஷியா போன்ற நாடுகளுக்கு கொரோனா வேகமாக பரவும் வாய்ப்புகள் உள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது…!!