நல்ல வசதியுடன் வாழ்ந்த என்னை பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாக்கிய மகளும், பேரனும்..!! தமிழகத்தில் நடந்த கொடூரம்..!!
வசதியாக வாழ்ந்த என்னை பிச்சை எடுக்கும் நிலைக்கு தன்னை மகளும், பேரனும் ஆளாக்கி விட்டதாக மூதாட்டி கண்ணீர் வேதனையுடன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 74 வயதுடைய கித்திரியம்மாள் என்ற பாட்டி திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்துள்ளார்.
மேலும் இந்த மனுவில், எனது மகள் சிறுமணியம்மாள், அவரது மகன் சேசு ஆரோக்கியம் போன்றவர்கள் எனக்கு ஆதரவாக இருந்து கடைசி காலம் வரை உணவு, உடை, உறைவிடம் மற்றும் மருத்துவ பராமரிப்பு செலவுகளை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி, எனது சொத்துக்களை வாங்கி கொண்டனர்.
ஆனால் அவர்கள் சொன்ன படி என்னை பராமரிக்காமல் அடித்து வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இதனால் நல்ல வசதியுடன் வாழ்ந்த என்னை தற்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாக்கி உள்ளனர். நான் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன்.
அதனால் எனது மகள், அவரது மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.