தன்னுடன் வரமறுத்த மனைவியை ஈவு இரக்கம் இன்றி கழுத்தறுத்து கொலை செய்த கணவன்…!!! சேலத்தில் நடந்த கொடூரம்..!!
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மன்னார் பாளையத்தை சேர்ந்த கோபி என்ற இளைஞனுக்கும் சேலத்தின் கங்காபுதூர் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மோகனேஸ்வரி என்ற இளம் பெண்ணினுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் 3 வயதுடைய ஒரு மகன் உள்ளார்.
மது போதைக்கு அடிமையாகி இருந்த கோபி தினமும் குடித்து விட்டு மோகனேஸ்வரியை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார்.இந்த கொடுமை அதிகரித்துக் கொண்டே போனது இதனால் ஆத்திரம் அடைந்து தனது மகனை அழைத்துக் கொண்டு மோகனேஸ்வரி கடந்த 2 மாதங்களுக்கு முன் தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.
அடிக்கடி கோபி, மோகனேஸ்வரியை சந்தித்து தன்னுடன் வருமாறு கட்டயப்படுத்தி வந்துள்ளார், மோகனேஸ்வரிக்கு கோபியுடன் செல்ல இஷ்டமில்லாமல் இருந்தார். மேலும் இந்த நிலையில் நேற்றுக்கு முன் தினம் மீண்டும் மோகனேஸ்வரியை சந்திக்க சேலத்துக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் வேலையை முடித்து இரவு 9 மணியளவில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோகனேஸ்ரியை மீண்டும் வருமாறு அழைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் உச்சகட்ட நிலையில் அடைந்த மோகனேஸ்வரியின் கழுத்தை கோபி அறுத்துள்ளார். கணவனின் கொடூர செயல் இரத்த வெள்ளத்தில் மிதந்த மோகனேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், மேலும் இந்த சம்பம் தொடர்பாக அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.