மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 3 வயது குழந்தையை காலால் எட்டி உதைத்து கொலை செய்த நபர்..!!! சென்னை நடந்த சோகம்..!!
சென்னை அருகே மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை காலால் எட்டி உதைத்து கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தியாவில் சென்னை மாவட்டம் பள்ளிக்கரனை அடுத்த சித்தாலபாக்கத்தில் வசித்து வரும் கங்கா என்ற பெண்ணுக்கு 3 வயதுடைய அருண் என்ற ஆண் குழந்தை உள்ளனர். கங்காவின் முதல் கணவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கட்டட வேலை செய்யும் வெங்கடேசன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதற்கு இடையில் மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த அருண் மீது வெங்கடேசன் வெறுப்பாக காட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிலையில் குழந்தை அருணை வெங்கடேசனிடம் விட்டு விட்டு கங்கா தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த வெங்கடேசன், குழந்தை அருணை காலால் எட்டி உதைத்துள்ளார்.
இதனால் குழந்தை கீழே விழுந்து தலையில் பலமாக காயம் ஏற்பட்டது. குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை அருண் உயிரிழந்தான். அதன் பின்னர் குழந்தையின் தாய் கங்கா கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.