சரியாக நெஞ்சு வலிக்கிறதாக கூறிய பயணி…. அவசர அவசரமாக தரை இறங்கிய விமானம்..!! பின்னர் நடந்த சோகம்..!
நேற்றைய தினம் நள்ளிரவு சுமார் 00: 15 மணியளவில் கொல்கத்தாவில் இருந்து அகமதாபாத்திற்கு பறந்த ஸ்பைஸ் ஜெட் எஸ்ஜி -406 விமானத்தில் பயணி ஒருவர் சரியாக நெஞ்சு வலிக்கிறதாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து 00: 31மணிக்கு இந்தூரில் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. உடனடியாக விமான நிலைய மேலாளர் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் ஜெயவிஜய் வாகு என்ற அந்த பயணியை மீட்டு பாந்தியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து இந்தூர் எம் ஒய் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக விமான நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.