வீட்டில் தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு பொது மக்களால் நேர்ந்த கதி…!!!
வீட்டில் தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட 20 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்த பின்னரே கிராம மக்கள் வாக்களித்தனர். இதன் காரணமாக அங்கு வாக்குப்பதிவில் 45 நிமிடம் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. அப்பொழுது ஏழாயிரம் பண்ணை அருகே ரெட்டியபட்டி கிராமத்தினர் பலர் வாக்களிக்க அங்குள்ள வாக்குச்சாவடிக்கு சென்று விட்டனர்.
அந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சமுத்திரராஜன் என்பவர் வீட்டில் தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளம் பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போது குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் படையெடுத்து அங்கு வந்து சமுத்திரராஜனை பிடித்து அடித்து உதைத்தனர்.
பின்னர் அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் தேர்தல் பணி காரணமாக பொலிஸார் அங்கு இல்லாததால் குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க தாமதமானது. அதைத் தொடர்ந்து இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை உடனடியாக போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது வரைக்கும் நாங்கள் அனைவரும் வாக்களிக்க மாட்டோம் என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏழாயிரம் பண்ணை பொலிஸார் சமுத்திரராஜன் மீது வழக்குப்பதிவு செய்தார். அதன் பின்னர் பாலியல் தொல்லை கொடுத்த சமுத்திரராஜனை கைது செய்து அந்த தகவலின் அறிக்கையை கிராம மக்களிடம் காட்டியுள்ளனர்.
அதன் பின்னர் ரெட்டியபட்டி கிராம மக்கள் அனைவரும் அங்கிருந்து சென்று அமைதியாக வாக்களித்தனர். இதனால் 45 நிமிடம் வாக்குப்பதிவு தாமதம் அடைந்து, அதன் பின்னர் தொடர்ந்து இடம்பெற்றது.