கண் முன்னே கட்டிய மனைவியிடம் தகாத முறையில் நடந்த நபர்…!!! இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த கணவனின் கொடூர செயல்…!!!
வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவியிடம் தகாத முறையில் நடந்த லொறி ஓட்டுநர் இதை பார்த்து ஆத்திரம் அடைந்த கணவரின் செயலால் தமிழகம் முழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தின் அவ்வையார் பாளையத்தைச் சேர்ந்த என்ற இளைஞன் லொறி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த மணிமோகன் நேற்று முன்தின இரவு வேளையில் மணிமோகனும் அவரது மனைவி செல்வியும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அங்கு வந்து விஜயகுமார் மணிமோகனின் மனைவியை தட்டி எழுப்பி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அந்த நல் இரவில் விஜயகுமாரை கண்டு பதறிய செல்வி சத்தம் போட்டுள்ளார், அப்போது கண்விழித்து பார்த்த மணிமோகன் அதிர்ச்சி அடைந்த நிலையில் விஜயகுமாரை பிடிக்க நினைப்பதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த மணிமோகனும் அவரது நண்பர்களும் ஒன்றிணைந்து விஜயகுமாரை பல பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் பைக்கில் வந்து கொண்டிருந்த விஜயகுமாரை மணிமோகன் மற்றும் அவரின் மூன்று நண்பர்கள் சேர்ந்து பிடித்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
அதையடுத்து இரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தார். மணிமோகன் அதோடு விடாமல் விஜயகுமாரின் வாயில் விஷத்தை ஊற்றிய நிலையில் அவரின் பைக்கை அவரது கழுத்தில் ஏற்றினர். சிறிது நேரத்தில் பின்னர் சம்பவ இடத்திலேயே விஜயகுமார் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து மணிமோகன் மற்றும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயகுமார் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலும் இந்த கொடூர கொலையை செய்து விட்டு தலைமறைவாக உள்ள மணி மோகன் மற்றும் சதிஸ்குமார், பூபதிராஜா, நாகராஜ்ஆகிய 4 பேரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.