வயிறு வலியால் அவதிப்பட்ட இளம் பெண்ணிற்கு மருத்துவமனையில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!!
வயிற்று வலியால் துடித்த வாய் பேச முடியாத இளம் பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனையில் குறித்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததுள்ளது.
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தின் அப்பரசம்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகள் 25 வயதுடைய கௌதமி என்ற இளம்பெண்ணிற்கு காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு மாற்றுத் திறனாளியாக உள்ளார்.
திருமணமாகாத கெளதமி சில மாதங்களுக்கு முன் வயிறு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு கௌதமியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் உங்கள் மகள் கர்ப்பமாக உள்ளார் என கௌதமியின் பெற்றோரிடம் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கௌதமியின் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பது குறித்து கெளதமிக்கு சரியாக சொல்லத் தெரியாததால் பெற்றோர்கள் குழம்பியுள்ளனர். இந்த நிலையில் நேற்று பிரசவ வலியால் அவதிப்பட்ட கௌதமிக்கு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
அதை தொடர்ந்து கௌதமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பொலிசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.