உன்னைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தை கூறி பல முறை உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய இளைஞன்..!!! பின்னர் நடந்த விபரீதம்..!!
தமிழகத்தில் கடலூர் மாவட்டம் ரெட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் 25 வயதுடைய பிரசாந்த் என்பவர் கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வந்தார். இவர் வியாபாரத்திற்கு பழங்கள் வாங்க செல்வது வழக்கம். அந்த வகையில் அவர் பழங்கள் வாங்க செல்லும் போது அந்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஆனந்தி என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரின் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்னனர். இந்த நிலையில் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசைவார்த்தை கூறி பிரஷாந்த் ஆனந்தியுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்னனர்.
இந்த நிலையில், சில நாட்களாக பிரசாந்த் ஆனந்தியுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஆனந்தி காதலன் பிரசாந்த்திடம் ஏன் நீ இப்போ என்னோடு பேசுவதில்லை என்று கேட்ட போது அதற்கு பிரசாந்த் எனக்கு உன்னை பிடிக்கவில்லை. உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார். ஆனந்தி பலமுறை கேட்டும் அவர் சம்மதம் தெரிவிப்பதாக இல்லை.
இந்த நிலையில் தான் பிரசாந்த்திற்கும் வேறொரு பெண்ணிற்கும் திருமணம் ஏற்பட்டு செய்யப்பட்டிருப்பதாக ஆனந்திக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஆனந்தி பிரசாந்த் வீட்டிற்கு சென்று அவர் வீட்டின் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் ஆனந்தியிடம் சமாதானம் பேசி அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
மேலும், பிரசாந்த் குறித்து விசாரித்ததில் அவர் சென்னைக்கு சென்றிருப்பதாக உறவினர்கள் கூறியுள்ளனர். அவர்களை எச்சரித்த பிரசாந்த்தை விரைவில் பொலிஸ் நிலையத்தில் வந்து ஆஜராகும் படி கூறியுள்னனர்.