இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!!!
இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் ஓரிச்சேர்க்கையில் ஈடுபட்டதில் ஏற்பட்ட பணப்பிரச்சினையே முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் என்பவர் ஹைதராபாத்தில் தனியாக வசித்து வந்தார்.இவரின் மனைவி இந்திரா சென்னையில் தங்கி பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சுரேஷ் பணிக்கு வராததால் உடன் வேலை செய்தவர்கள் அவருக்கு தொலைபேசியில் அழைத்துள்ளனர். அதையடுத்து உறவினர்களுக்கு இது குறித்து தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் சுரேஷ் வசிக்கும் வீட்டுக்கு சென்று பார்த்த போது அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து விசாரணையை தொடங்கிய பொலிஸார் சுரேஷ் கொலை தொடர்பாக ஆய்வக உதவியாளர் ஸ்ரீனிவாஸை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஸ்ரீனிவாஸ் இரத்த மாதிரிகளை சேகரிப்பதற்காக சுரேஷ் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவருடன் ஓரினச்சேர்க்கை உறவை எதிர்பார்த்த சுரேஷ், தன்னுடன் உறவு வைத்துக்கொண்டால் பணம் தருவதாகவும் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பேசியபடி சுரேஷ் பணம் தரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த செயலால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீனிவாஸ், விஞ்ஞானி சுரேஷை கொலை செய்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.