கங்காஹட் புயபெயபாயவ பகுதியில் ஏற்பட்ட விபத்து…!!!
இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் வீதியோர நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு மேலாக தனியார் பேருந்து ஒன்று பயணித்ததில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
புலந்ஷர் மாவட்டத்தின் கங்காஹட் புயபெயபாயவ பகுதியில் இன்று காலை இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 4 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.
யாத்திரிகர்களான அவர்கள் வீதியோர நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த போது தனியார் பேருந்து ஒன்று அவர்களுக்கு மேலாக எறியுள்ளது. மேலும் இந்த சம்பவம் நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த பேருந்தின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மரண விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியங்ஸுவின் துயைபௌர உஸி நகரில் உள்ள அதிவேக நெடுஞ்சாலை ஒன்றின் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்ததுடன் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த பாலம் இடிந்து வீழ்ந்தபோது, அதில் பயணித்த 3 மகிழுர்ந்துகளும் கீழே வீழ்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக ஸின்ஹுஹா செய்திச் சேவை கூறியுள்ளது.