போராட்டங்களைக் கணக்கில் கொள்ளாது குடியுரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியது மத்திய அரசு!
இந்திய மத்திய அரசால் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த குடியுரிமைச் சீர்திருத்தச் சட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வந்துள்ளது.
இந்திய அரசால் ஏற்கனவே நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம், ஜனவரி 10ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் என இந்திய அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தன.
இந்நிலையில், இச்சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய நிலையில் இன்று இரவு முதல் குடியுரிமைச்சட்டம் அமுலுக்கு வருகிறது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.