“கொடூரர்களால் நீங்கள் அனுபவித்த வேதனையை நானும் உங்களுக்காக அனுபவிக்கிறேன்” வலியை தாங்கிக் கொண்டு பிரியங்காவிற்காக இளம் பெண் செய்த செயல்..! வைரலாகும் வீடியோ..!!
ஹைதராபாத்தில் கொடூரமான முறையில் கூட்டு பலாத்காரம் செய்யப் பட்டு பின் கொலை செய்து எரிக்கப் பட்ட கால் நடை மருத்துவர் பிரியங்காவிற்கு நீதி கேட்டு இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கல்லூரி பள்ளி என அனைத்து மாணவ மாணவிகளும் 4 மிருகங்களுக்கும் மரண தண்டனை கொடுக்கும் படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலைதில் கால் நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் மரணமே இறுதியாக இருக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் 4 பேருக்கும் கொடுக்கும் தண்டனை இது போல் இனி குற்றம் செய்ய நினைப்போருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என கோரி சிலர் செய்துள்ள செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
யானா மிர்ஷாந்தினி என்ற இளம் யுவதி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார். இதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..அன்புள்ள பிரியங்கா.. உன்னை எம்மால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது..அந்த நொடி நீ எத்தனை வேதனை பட்டிருப்பாய்..உனக்கு எந்த அளவிற்கு வலித்திருக்கும் என்பதை கற்பனை செய்யும் போதே உயிர் பிரிவது போன்ற வலி ஏற்படுகின்றது.
ஆனால் உன் நிலை இனி யாருக்கும் வர கூடாது.. கொடூரர்கள் உன்னை எரித்த போது உனக்கு வலித்ததில் சிறிதளவை நானும் அனுபவிக்க வேண்டும். உன்னை காப்பாற்ற முடியாததால் நானும் சிறிதளவு அதனை அனுபவிக்கின்றேன். அதனால் இந்த மெழுகுவர்த்தி என் கையிலேயே எரிந்து முடியட்டும். எந்த ஒரு தட்டையும் என் கையில் வைக்கப் போவதில்லை. என உருக்கமாக பதிவிட்டுள்ளார்…!
dear #PriyankaReddy I held that candle without a plate for the entire time I was there, simply bcoz I wanted to feel your pain when the beasts were burning you, I hope the nation's tears and pain don't go unheard this time, RIP? pic.twitter.com/2GPYWqQMZP
— Yana Mirchandani يانا مِرچندانى (@MirchandaniYana) December 2, 2019