என் தம்பியை எனக்கு தாருங்கள் ” குண்டு வெடிப்பில் தாய் தந்தையை இழந்து தம்பி மட்டும் மீதமுள்ள நிலையில் கதறி அழும் அக்கா.!
கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் நடந்த கொடூர தீவிரவாத தற்கொலையானது பெற்றோரையும் பிள்ளைகளையும் அனாதையாக்கியது. கணவனை இழந்த பெண்கள் மனைவியை இழந்த ஆண்கள் இப்படி பலரை தவிக்க வைத்துக் கொண்டிருகின்றது.
தீவிரவாதி இரக்கமற்று பறித்த உயிர்களால் இன்று இமைகள் மூட மறந்து பல விழிகள் துடித்துக் கொண்டிருகின்றன. இப்படி துடிக்கும் ஒருவர் தான் ஜீவனா திருகேஸ்வரன்.
தனது படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்ற ஜீவனா நினைத்திருக்க வாய்ப்பில்லை தன்னுடைய தாயும் தந்தையும் ஈஸ்டர் தினத்தின் பின் தன்னுடன் பேசவே மாட்டார்கள் என்று.
21ம் திகதி காலையில் தேவாலயம் செல்வதற்கு தயாராகிய தாய் மகன் சுஷானை தேவாலயம் வரும்படி அழைத்திருகின்றார். இரவு பூஜைக்கு சென்றதால் தூக்கம் வருவதாக கூறிய சுஷான் தாய் தந்தையை போக சொல்லி தூங்கியுள்ளான். சில நிமிடத்தில் சிறுவனுக்கு தாய் தந்தை இல்லை என்ற தகவல் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து சிதறிய நிலையில் பெற்றோரை கண்ட சிறுவன் துடித்து போய் உள்ளான். தாய் தந்தையை இழந்த சுஷான் மற்றும் ஜீவனா வெவ்வேறு திசைகளில் அனாதையாக உள்ள நிலையில் ஜீவனா தன்னுடைய தம்பியை தன்னிடம் கொண்டுவந்து சேர்க்க உதவுமாறு வேண்டுகிறேன் ஒன்றை வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தன்னால் தன்னுடைய தம்பியை காபாற்ற முடியும் என கூறியுள்ள ஜீவனா தன் தம்பி கால் செய்து அழுவதை தாங்க முடியவில்லை என கண்ணீருடன் கூறியுள்ளார்.!