கல்முனையில் தமிழர்கள் மீது கல் வீச்சு நடத்திய முஸ்லீம்கள். .!! அடித்து விரட்டப் பட்ட பிரதி மேயர்..!!
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தமிழ் மக்களுக்காக தரம் உயர்த்தி தரக் கோரி ஹிந்து,கிறிஸ்தவ, பெளத்த தேரர்கள் இன்று 6வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குறித்த பிரதேச சபையை தரமுயர்த்த கூடாது என கூறி முஸ்லீம்கள் எதிர்ப்பு போராட்டம் நடந்தி வருகின்றனர்.
நேற்றைய தினம் தமிழ் மக்கள் மீது முஸ்லீகள் சிலர் கல் வீச்சு தாக்குதல் நடத்தியதால் குறித்த பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையை தவிர்க்க ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப் பட்டனர். அதனை தொடர்ந்து இன்று காலையில் இருந்து உண்ணாவிரத போராட்ட களத்திற்கு பலரும் வந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில்
உண்ணாவிரத போராட்டத்தை கலவரமாக்கும் எண்ணத்தில் இருக்கும் கல்முனை பிரதி மேயர் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்திற்கு வர முயற்சி செய்த போது மக்களால் அடித்து விரட்டப் பட்டார்.
இந்த நிலையில் குறித்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்திற்கு மூன்று மாதகாலம் அவகாசம் வேண்டும் என அரசால் வழங்கப் பட்ட செய்தியை சுமந்திரன் படித்து காட்டிய போது கோபமடைந்த மக்கள் சுமந்திரனை தாக்க முயற்சி செய்துள்ளனர்.
வாய் வாக்குறுதி வேண்டாம் வர்த்தமானி வெளியிடுங்கள் என கூறி மக்கள் அடிதடியில் இறங்கினார்கள். இது தான் தமிழர் பண்பாடா கலாச்சார என சுமந்திரன் கேட்ட போதும் மக்கள் கண்டுகொள்ளவில்லை. எல்லா பக்கமும் இனி அடி வாங்க முடியாது என்ற குரல் தமிழனை இனி நிமிர்ந்து நடக்க வைக்கும்..!!