கல்முனை போராட்டக்காரர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி..!! தொடர்கிறது போராட்டம்!
கல்முனை போராட்டக்காரர்களுக்கும் அரச தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் குழப்பநிலை ஏற்பட்டது .இதனால் போராட்டம் தொடர்ந்தும் நடைபெறும் எனவும் கூறினார்.மேலும் அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் நடத்தும் போராட்ட இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர் மனோ கணேசன் மற்றும் தயா கமகே ஆகியோர் அங்கு நேரடியாக வந்தார்கள்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து பிரதமர் விடுத்துள்ள செய்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மதகுருமார்களுக்கு அறிவிக்கப்பட்டது.எனினும் கருத்தில் கொள்ளவில்லை.அவர்களின் பேச்சுவார்த்தை எமக்கு நல்ல ஒரு முடிவை பெற்று தராதமையால் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தமை. அதனை தொடர்ந்து அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது. பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.