வைத்தியசாலையில் இருக்கும் தீவிர வாதி சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலம் .! அதிர்ந்த புலனாய்வு பிரிவு..!
அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தீவிரவாதி சஹ்ரானின் மனைவியை நேற்றைய தினம் விஷேட புலனாய்வு குழு ஒன்று விசாரணைக்கு உட்படுத்தியது. அதில் சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா சொன்ன விடயங்கள் பொலீஸாரை அதிர வைத்துள்ளது. அவர் கூறியவை: மதத்திற்காக உயிரையும் கொடுப்பேன் என அடிக்கடி என் கணவர் கூறி வந்தார் ஆனால் அவர் தீவிரவாத நோக்கில் தான் இதனை கூறினார் என்பது எனக்கு தெரியாது.
என் கணவர் அதிக நாட்கள் வீட்டில் இருக்க மாட்டார் வெளியே சென்றுவிடுவார். கேட்டால் சண்டை வரும் என்பதால் நான் பெரிதாக கேட்பதில்லை. நாங்கள் அடிக்கடி வீடு மாறுவது வழக்கம் ஒரு வீட்டில் சில காலம் மட்டுமே வாடகைக்கு இருப்போம் வத்தளை, கொள்ளுப்பிட்டி, பாணந்துறை, கல்கிசை என எனது கணவர் வீடுகளை மாற்றியே வாழ்ந்தோம். அதனை அடுத்து எங்களுடன் புலஸ்தினி வந்தார்.
கணவர் ஹஸ்துன் (நீர்கொழும்பு தற்கொலைதாரி) புலஸ்தினியை என்னுடன் விட்டார்கள் பின் என் கணவர் அவர் எல்லாம் சென்றுவிட்டார்கள். அதன் பின் 19ம் திகதி கல்முனை செல்ல வேண்டும் என தயாராக சொன்னார்கள். நாமும் தயாராகி சென்றோம். அப்போது இடையில் என் கணவர் எங்களை சந்தித்தார். பை ஒன்றில் பணமும் கொடுத்தார். அதனை வான் செலவு மற்றும் தேவைக்கு எடுக்கச் சொன்னார்.
அதன் போது தான் கிரி உல்ல பகுதியில் வெள்ளை ஆடைகளை கொள்வனவு செய்தோம். ஏன் என கேட்டதற்கு புலஸ்தினி “உனக்கு எதிர்காலத்தில் தேவைப்படும்” வைத்துக் கொள் என கூறினார். ஏன் வெள்ளை உடை வாங்கினார் என்பது புலஸ்தினிக்கு தான் தெரியும் என கூறியதுடன் 19ம் திகதி தான் சாய்ந்தமருது வீட்டில் குடியேறினோம். 21ம் திகதி என் கணவர் தற்கொலை தாக்குதல் நடத்தியதை நினைத்து அழுத போது தான் தெரியும் அனைவரும் தற்கொலை தாரிகள் என்பது.
புலஸ்தினி என்கிற சாரா, மற்றும் என் மைத்துனர்கள், மாமனார் அனைவரும் குண்டை வெடிக்க வைக்கப் போகிறார்கள் என்பதை அறிந்தேன் அவர்கள் வெடிக்கும் வைக்கும் நேரம் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினேன் அதனால் தான் குழந்தையும் நானும் தப்பினேன் என கூறியுள்ளார். இவர் கூறியத்ய் உண்மையா பொய்யா என தெரியாத நிலையில் பொலீஸார் விசாரணையை தொடர்ந்துவருகின்றனர்.!