நேற்றிரவு முஸ்லீம் வர்த்தகர்களின் கடைகள் தகர்ப்பு..! இலங்கையில் மீண்டும் பதற்றம்.!
நேற்றைய தினம் இளைஞர் ஒருவரின் பேஸ் புக் பதிவை தவறாக புரிந்துகொண்ட இளைஞர் குழு சிலாபம் பகுதியில் வன்முறையை தூண்டியதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு சட்டம் போடப் பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இரவு குளியாப்பிட்டிய கரந்திப்பல பகுதியில்..
முஸ்லீம் வர்த்தகர்களின் கடைகள் பல இளைஞர் குழு ஒன்றால் தகர்கப் பட்டுள்ளது. இந்த தாக்குதல் இடம்பெறும் போது சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் தாக்குதல் நடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிலரை கைது செய்தனர்.
இதனை அடுத்து அந்த பகுதியில் இளைஞர்ககார் பதற்றம் அதிகரித்தது. பொலீஸ் நிலையத்தின் முன் குவிந்த பலர் உடனடியாக கைது செய்யப் பட்டவர்களை விடுவிக்குமாறு பொலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக..
இன்று காலை நிறைவடைந்த 6மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப் பட்டு தற்போது நீக்கப் பட்டுள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களும் முடக்கம் செய்யப் பட்டுள்ளது. இனவாதத்தை தூண்டும் இத்தகைய நடவடிக்கைகள் என்று தீர போகிறதோ..!