முஸ்லீம்களின் புனித நூலான குர் ஆன் எரிப்பு..! இலங்கையில் தொடர்கின்ற கொடூரங்கள்..!
எந்த ஒரு மதத்திலும் அடுத்தவர் மதத்திற்கு தீங்கு விளைவிக்கும்படி தெரிவிக்க வாய்ப்புகள் இல்லை, எல்லா மதங்களுமே அமைதியையும் அன்பையுமே போதிக்கின்றன. குறிப்பாக பெளத்த மதத்தில் கால்களில் மிதிபட்டு எறும்பு கூட மரணித்து விட கூடாது என புத்த பெருமான் கூறியவை இன்றளவும் எம் மனதில் இருக்கிறது.
எமது வீடுகளில் இன்றளவும் புத்த பெருமானின் சிலை அல்லது புகைப்படம் வைத்து வணங்குகிறோம். ஆனால் அவரது போதனைகளின் வழி வந்த சிலர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனை தீயிட்டு எரித்துள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் இஸ்லாம் மக்களின் பள்ளி வாசல்கள் அடித்து நொருக்கப் பட்டதுடன் புனித நூலான குர் ஆன் எரிக்கப் பட்டுள்ளது. இலங்கையில் தீவிர வாத தாக்குதல் நடத்தியது இஸ்லாம் மதத்தை சேர்ந்த தீவிரவாதிகள் என்பதால் ஒட்டுமொத்த முஸ்லீம்களும் தீவிர வாதிகள் எனும் கண்ணோட்டத்தில் பார்க்கப் படுகின்ற அதே வேளை இனவாதக் கும்பலின் தாக்குதலுக்கும் ஆளாகின்றார்கள்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நபர் ஒருவரின் பேஸ்புக் பதிவை காரணமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட வன்முறை ஊரடங்கு சட்டம் மூலம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்த போதும் ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.