நாளை அல்லது நாளை மறு தினம் இலங்கையில் தீவிரவாத தாக்குதல்.! முன்னாள் ஜனாதிபதியால் பரபரப்பு.!
கடந்த 21ம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பல்வேறுபட்ட கருத்துகள் நாட்டில் நிலவி வரும் நிலையில் சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை அல்லது நாளை மறுதினம் நாட்டில் மேலும் குண்டுகள் வெடிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்துள்ளாக சியத என்ற சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தில் மீதான நம்பிக்கை இல்லாத நிலையில் இதனை முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளாராம். பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதுடன் அனைத்து இடங்களிலும் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்ற நிலையில்
இந்த செய்தி வெளியாகி மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் தீவிரவாதிகள் முற்றிலும் ஒழித்து நாட்டு மக்களை காப்பாற்றுவோம் என ஒரு பக்கம் கூறிக்கொண்டிருந்தாலும் நாட்டில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமை குறிப்பிட தக்கது.!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!