காதலனுடன் போதையில் இருந்த மாணவி…!! பொலிஸ் என்று கூறி மாணவியை அழைத்து சென்ற நபர்..!! பின்னர் நடந்த கொடூரம்..!!
இந்தியா திருச்சியில் உள்ள பிரபல என்ஐடி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு தமிழகம் உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து அதிகமான மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு விடுதியும் இருக்கும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவி இங்கு தங்கி படித்து வந்துள்ளார். இந்த பெண் சென்னையை சேர்ந்த இளைஞனை காதலித்து வந்தார்.
!Advert!
நேற்று நள்ளிரவில் மாணவியும் அவர்காதலனும் விடுதியை விட்டு வெளியில் வந்து தனிமையில் இருந்தார்கள்.அந்த வேளையில் அங்கு நின்ற ஒரு இளைஞன் காதல் ஜோடியை நன்கு அவதானித்து வந்தார். இந்த நேரத்தில் காதல் ஜோடிகள் இருவரும் கஞ்சா அடித்து அதிக போதையில் தன்னையே மறந்து இருந்ததை நன்கு அவதானித்தார்.
மேலும் அங்கு நின்று கவனித்த இளைஞன் உடனே விரைந்து சென்று அந்த காதல் ஜோடியிடம் நான் பொலிஸ் இந்த நள்ளிரவில் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு, காதலனை சரியாக தாக்கவும் அவர்கள் அங்கிருந்து ஓடி சென்றுள்ளனர். பின்னர் மாணவியை விடுதியில் விடுவதாக கூறி கல்லூரிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றும் விட்டார்.
!Advert!
மறுநாள் காலையில் அந்த மனைவி பொலிஸ் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி புகார் அளித்தார். பின்னர் இந்த புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் பார்த்த பின்னர் மாணவியை துஷ்பிரயோகம் செய்த அந்த இளைஞரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டார். இந்த விசாரணையில் போது அவர் பெயர் மணிகண்டன் என்பது தெரியவந்ததுள்ளது. பின்பு துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.