ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த முக்கிய நபர் கைது..!!
இலங்கையில் போதைப்பொருள் தொடர்பாக பல கைதாகியுள்ள நிலையில் இதற்கு சூத்திரதாரியான முக்கிய நபர் கைது செய்யப்படாத நிலையில் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். இந்த ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த முக்கிய குற்றவாளி இன்று வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் பத்தரமுல்ல பகுதியில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
!Advert!
மாலபே பகுதியை சேர்ந்த வெலிவிட்ட சுத்தா எனும், 32 வயதுடைய மஹேஸ் வசந்த திஸாநாயக்கவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 16 கிராம் 660 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மில்லி 9 வகையான துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்கள் 10 ம் மீட்கப்பட்டுள்ளது.
!Advert!
மேலும் சம்பவம் குறித்து மேலதிக மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றதாக தெரிவித்துள்ளனர். .
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.