களுத்துறைப் பகுதியில் மக்களை தாக்க வந்த மர்ம நபர்..! காப்பாற்ற முயன்ற இராணுவ வீரர் வைத்தியசாலையில்..!
இலங்கையில் தற்போது மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள போதிலும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இராணுவத்தினரும் பொலீஸாரும் இதனால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் களுத்துறைப் பகுதியில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் மொரட்டுவ பகுதியை சேர்ந்த 59 வயதான நபர் செயற்பட்டுள்ளார்.
இதனால் மக்கள் பீதியடைந்த நிலையில் களுத்துறை தெற்கு இரயில் நிலையத்தில் கடமையில் இருந்த ராணுவ சிப்பாய் குறித்த நபரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார் அதன் போது ராணுவ சிப்பாயை கூரிய ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளார்.
அதன் போது சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் குறித்த நபரை கைது செய்ததுடன் ராணுவ சிப்பாயை நாகொட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக் பட்டுள்ள நிலையில் குறித்த மர்ம நபரை யார் அனுப்புனார்கள்,எதற்காக மக்களை தாக்க முயன்றார் என்பது இன்னும் தெரியவரவில்லை..!