இலங்கை சிலாபம் பகுதியில் பதற்றம். நாளை காலை 6 மணி வரை பொலீஸ் ஊரடங்கு சட்டம் அறிவிப்பு..!
சிலாபம் பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. சிலாபத்தில் இன்று ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றதை தொடர்ந்து இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக..
நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளதாக பொலீஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலை தொடர்ந்து நாட்டில் அமைதி காக்குமாறு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு படையினர் வேண்டுகோள் விடுத்துள்ள போதும்
கடந்த வாரம் நீர்கொழும்பு பகுதியில் கலவரம் ஏற்பட்ட நிலையில் இன்று இரு குழுக்கள் இடையே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது..!