வடக்கில் இருந்து தலைவர் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களை வெளியேற்றினார்..? கருணா பேட்டி..!
இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலின் பின் முஸ்லீம்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருகின்றது. குற்றவாளிகளுடன் சில அப்பாவிகளும் தண்டனை அனுபவித்துக் கொண்டிருகின்றனர். அப்பாவி முஸ்லீகள் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருக்கிறது.
இந்த நிலையில் அப்பாவி முஸ்லீம்கள் தாக்கப் படுவது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா) பேட்டியளித்துள்ளார். அதன் போது விடுதலைப் புலிகள் ஏன் முஸ்லீம் மக்களை வடக்கிலிருந்து வெளியேற்றினார்கள் என்பது தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளார்.
வடக்கில் ஒரு சில முஸ்லீம்களின் செயற்பாடுகள் தவறாக இருந்தது. இதனால் சில போராளிகளால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது. இந்த நிலையில் அப்பாவி முஸ்லீம்களை தண்டிக்க கூடாது என்பதில் தலைவர் பிரபாகரன் உறுதியாக இருந்தார்.
எக் காரணத்திற்காகவும் முஸ்லீம் தலைவர்களோ முஸ்லீம்களோ பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக அவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினார். கிழக்கில் முஸ்லீம் பள்ளி வாசலில் நடந்த தாக்குதல் கூட பிரபாகரனுக்கு தெரியாமல் நடந்ததே என குறிப்பிட்ட கருணா பிரபாகரனுடன் முரண்பாடு இருந்தாலும்
அவரது கொள்கைகளை சொல்வதில் ஒன்றும் இல்லை. எந்த ஒரு நிலையிலும் சிங்கள, முஸ்லீம், அப்பாவு மக்களை தாக்க கூடாது அத்துடன் மக்கள் குவியும் இடங்களில் தாக்குதல் நடத்தும் நிலை வந்தாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் என கூறிபிட்டுள்ளதுடன்
வடக்கில் இருந்து முஸ்லீம்களின் பாதுகாப்பிற்காகவே வெளியேற்றப் பட்டனர் என கூறினார். அத்துடன் 21ம் திகதி தாக்குதலுடன் சம்மந்தப் பட்ட அனைவருக்கும் தண்டனை கொடுப்பது கட்டாயம் எனவும் கூறியுள்ளார்..!