வரலாற்று புகழ் பெற்ற நாகபூஷணி கோயிலில் மோசமாக நடந்து கொண்ட பொலீஸார்..! உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமர்..!!
வரலாற்று சிறப்பு மிக்க நாகபூசணி அம்மன் கோவிலுக்குள் காலணிகளுடன் பொலீஸார் மாற்றும் படையினர் செல்வது மற்றும் அமைதியாக இருக்க வேண்டிய கோயிலில் தகாத வார்த்தைகள் பேசுவது என அட்டகாசம் செய்தனர். இதனை நாம் எமது செய்திதளம் ஊடாக சுற்றிக் காட்டியதை தொடர்ந்து பல இணையதளங்கள் செய்தியாக வெளியிட்டன.
இந்த செய்தி காட்டு தீ போல் பரவியதை தொடர்ந்து சில தமிழ் தலைவர்கள் இந்த அட்டகாசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தகவல் பிரதமர் வரை சென்றதை தொடர்ந்து பிரதமர் மகிந்த ராசபக்ச அவர்கள் வடபிராந்திய பிரதிப்பொலீஸ்மா அதிபரை தொடர்பு கொண்டு இந்த செயற்பாடுகள் பற்றி கேட்டறிந்ததுடன் இது போன்ற செயற்பாடுகள் இனி இடம்பெற கூடாது,
அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் உத்தவிட்டதை தொடர்ந்து, நயினாதீவு பகுதி பொலீஸ் அத்தியட்சகர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் பட்டுள்ளது. இந்த விடயம் வேண்டுமென செய்த விடயம் என்றும்,
எதேச்சையாகவே காலணியுடன் சென்றதாகவும் இனி இது போன்ற விடயங்கள் நடக்காது எனவும் கூறியுள்ளனர். எப்படியோ தீர்வு கிடைத்தால் சரி…!!!